Rotary Events
Filter Events
Thank You District 3000,3206,3231,3234
Thank you, Rotary Club of BHEL City Tiruchirappalli, Rotary Clubs of Theni District, District 3206, District 3231, District 3234 for your kind wishes on my appointment as Vice President of Rotary International (2026–27). I sincerely appreciate your support and encouragement.
71 ஆண்டுகளுக்குப்பிறகு உலகை ஆளும் திருச்சி தமிழன் !
ரோட்டரி இன்டர்நேஷனலின் இயக்குநர்களுள் (2025-2028) ஒருவராக பதவி வகித்துவரும், எம்.எம்.எம். முருகானந்தம் 2026 – 2027 ஆம் ஆண்டிற்கான, ரோட்டரி இன்டர்நேஷனலின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ரோட்டரி இன்டர்நேஷனலின் வரலாற்றில், தமிழர் ஒருவர் முதன்முறையாக இத்தகைய உயர் தகுதியை எட்டியிருக்கிறார் என்பது உண்மையில் வரலாற்றுப் பெருமைதான்.
இதற்கு முன்னர், ரோட்டரி இன்டர்நேஷனலின் துணைத் தலைவராக மூன்று இந்தியர்கள் பதவி வகித்திருக்கிறார்கள். BT தாக்கூர் ( 1946-47); ஷபூர் பில்லிமோரியா (1949-50); நிதிஷ் லஹாரி (1953-54) ஆகியோரை அடுத்து, இந்தியாவிலிருந்து நான்காவது நபராக தேர்வாகியிருக்கிறார். மிக முக்கியமாக, ஏறத்தாழ 71 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தியர் ஒருவர் ரோட்டரி இன்டர்நேஷனலின் துணைத் தலைவர் பதவியை அலங்கரிக்கிறார்.
திருச்சியின் அடையாளமாக, தமிழகத்தின் பெருமையாக, உலகை ஆளும் இந்தியனாக உருவெடுத்திருக்கும் எம்.எம்.எம். முருகானந்தம் இன்னும் பல சாதனை உச்சங்களைத் தொட வாழ்த்தி மகிழ்கிறது, உங்கள் அங்குசம் !
Click Here
சர்வதேச ரோட்டரி துணைத்தலைவராக முருகானந்தம் தேர்வு: திருச்சிக்கு பெருமிதம்
இந்திய ரோட்டேரியன் முருகானந்தம் எம்., ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்கத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட , எக்செல் குழுமத்தின் தலைவர்,தொழிலதிபர்,முருகானந்தம் எம்., 2026–27 ஆண்டிற்கான ரோட்டரி இன்டர்நேஷனல் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வரவிருக்கும் ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவர் ரோட்டேரியன் ஒலயின்கா பபாலோலா அவர்களால் இந்த மதிப்புமிக்க உலகளாவிய தலைமைப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு, இயக்குநராக பதவி வகித்தபோது ரோட்டரி இன்டர்நேஷனல் துணைத் தலைவர்களாக இந்தியாவிலிருந்து மூன்று ரோட்டேரியன்கள் மட்டுமே பணியாற்றியுள்ளனர்.
பி.டி. தாக்கூர் (1946–47), ஷப்பூர் பில்லிமோரியா (1949–50), மற்றும் நிதிஷ் லஹாரி (1953–54). 71 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த உயரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவிலிருந்து இளம் தலைவராக முருகானந்தம் திகழ்கிறார்.
துணைத் தலைவர் பொறுப்புடன் இணைந்து, 2026–27 ரோட்டரி ஆண்டில் ரோட்டரி ஃபவுண்டேஷன் திட்டங்களுக்கான இயக்குநர் இணைப்பாளராக (Director Liaison)வும், இன்டர்நேஷனல் போலியோப்ளஸ் கமிட்டி உறுப்பினராகவும் அவர் பணியாற்றவுள்ளார்.
தற்போது, முருகானந்தம் 17 உறுப்பினர்களைக் கொண்ட ரோட்டரி இன்டர்நேஷனல் நிர்வாகக் குழுவின் இயக்குநராக உள்ளார். மேலும், உறுப்பினர் வளர்ச்சி குழு உறுப்பினராகவும், 2025–26 ஆம் ஆண்டிற்கான RI ஸ்டீரிங் கமிட்டியின் இணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
துணைத் தலைவராக, ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவர் வழங்கும் பணிகளை நிறைவேற்றுவார். மேலும், தலைவர் வேண்டுகோளின் பேரில், RI நிர்வாகக் குழுவின் தலைவராகவும் அவர் செயல்படுவார்.
முருகானந்தத்தின் ரோட்டரி பயணம் இன்றைய இளம் தலைமுறையினர் உட்பட பலருக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது. அவர் 16 வயதில் ரோட்டராக்டராக தனது சேவையைத் தொடங்கி, தலைமைப் பொறுப்புகளில் படிப்படியாக உயர்ந்தார். சிறந்த மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதி முதல், தனது மாவட்டத்தை கின்னஸ் சாதனைகளுக்கு வழிநடத்தியதால் “கின்னஸ் கவர்னர்” என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.
மேலும், ரோட்டரி இன்டர்நேஷனலின் உயரிய விருதான “Service Above Self Award” விருதை பெற்றிருக்கிறார்..
அவர் மேற்கொண்ட தலைமைப் பொறுப்புகளில் ரோட்டரி பொது படிம ஒருங்கிணைப்பாளர், மாவட்ட மாநாடுகளில் RI தலைவரின் பிரதிநிதி, மண்டல மற்றும் சர்வதேச நிலைகளில் பல பொறுப்புகள் ஆகியவை அடங்கும். MAHABS 2021 ரோட்டரி மண்டல கருத்தரங்கு (Rotary Zone Institute) மற்றும் 2023 மெல்போர்ன் ரோட்டரி இன்டர்நேஷனல் மாநாட்டில் தென் ஆசிய வரவேற்பு நிகழ்ச்சி ஆகியவற்றின் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
மேலும், LEAD 2025 – AIM HIGH எனும் ரோட்டரி இந்திய தலைமை மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராகவும் அவர் செயல்பட்டார். ஆகஸ்ட் 2025-ல் நடைபெற்ற இந்த மாபெரும் நிகழ்வில் 10-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 12,500 ரோட்டேரியன்கள் கலந்து கொண்டனர். இதில் ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவர், தமிழ்நாடு துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாடு சிறிய ரோட்டரி மாநாடு (Mini Rotary Convention) எனப் பெரிதும் பாராட்டப்பட்டது.
கடந்த மாதம், ரோட்டரி இன்ஸ்டிட்யூட் 2026 நிகழ்வு இலங்கையில் நடைபெறும் என்று முருகானந்தம் அறிவித்தார். இதுவரை இந்தியா, நேபாளம், பூடான், இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு ரோட்டரி இயக்குனராக இருந்த முருகானந்தம் அவர்கள், தற்பொழுது 220 நாடுகளுக்கு ரோட்டரி துணை தலைவராக செயல்பட உள்ளார். அவருக்கு உலகெங்கும் உள்ள ரோட்டேரியன்கள், அவரது ரோட்டரி இன்டர்நேஷனல் துணைத் தலைவர் தேர்வை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்று வாழ்த்தியுள்ளனர்
Click here
இந்திய ரோட்டேரியன் முருகானந்தம் ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்கத்தின் துணைத் தலைவராக நியமி னம்.71 ஆண்டுகளுக்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் தலைவர்.
இந்திய ரோட்டேரியன் முருகானந்தம் ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்கத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட , எக்செல் குழுமத்தின் தலைவர்,தொழிலதிபர்,முருகானந்தம் எம்., 2026–27 ஆண்டிற்கான ரோட்டரி இன்டர்நேஷனல் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வரவிருக்கும் ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவர் ரோட்டேரியன் ஒலயின்கா பபாலோலா அவர்களால் இந்த மதிப்புமிக்க உலகளாவிய தலைமைப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு, இயக்குநராக பதவி வகித்தபோது ரோட்டரி இன்டர்நேஷனல் துணைத் தலைவர்களாக இந்தியாவிலிருந்து மூன்று ரோட்டேரியன்கள் மட்டுமே பணியாற்றியுள்ளனர்.
பி.டி. தாக்கூர் (1946–47), ஷப்பூர் பில்லிமோரியா (1949–50), மற்றும் நிதிஷ் லஹாரி (1953–54). 71 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த உயரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவிலிருந்து இளம் தலைவராக முருகானந்தம் திகழ்கிறார்.
துணைத் தலைவர் பொறுப்புடன் இணைந்து, 2026–27 ரோட்டரி ஆண்டில் ரோட்டரி ஃபவுண்டேஷன் திட்டங்களுக்கான இயக்குநர் இணைப்பாளராக (Director Liaison)வும், இன்டர்நேஷனல் போலியோப்ளஸ் கமிட்டி உறுப்பினராகவும் அவர் பணியாற்றவுள்ளார்.
தற்போது, முருகானந்தம் 17 உறுப்பினர்களைக் கொண்ட ரோட்டரி இன்டர்நேஷனல் நிர்வாகக் குழுவின் இயக்குநராக உள்ளார். மேலும், உறுப்பினர் வளர்ச்சி குழு உறுப்பினராகவும், 2025–26 ஆம் ஆண்டிற்கான RI ஸ்டீரிங் கமிட்டியின் இணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
துணைத் தலைவராக, ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவர் வழங்கும் பணிகளை நிறைவேற்றுவார்.
மேலும், தலைவர் வேண்டுகோளின் பேரில், RI நிர்வாகக் குழுவின் தலைவராகவும் அவர் செயல்படுவார்.
முருகானந்தத்தின் ரோட்டரி பயணம் இன்றைய இளம் தலைமுறையினர் உட்பட பலருக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது. அவர் 16 வயதில் ரோட்டராக்டராக தனது சேவையைத் தொடங்கி, தலைமைப் பொறுப்புகளில் படிப்படியாக உயர்ந்தார். சிறந்த மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதி முதல், தனது மாவட்டத்தை கின்னஸ் சாதனைகளுக்கு வழிநடத்தியதால் “கின்னஸ் கவர்னர்” என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார். மேலும், ரோட்டரி இன்டர்நேஷனலின் உயரிய விருதான “Service Above Self Award” விருதை பெற்றிருக்கிறார்..
அவர் மேற்கொண்ட தலைமைப் பொறுப்புகளில் ரோட்டரி பொது படிம ஒருங்கிணைப்பாளர், மாவட்ட மாநாடுகளில் RI தலைவரின் பிரதிநிதி, மண்டல மற்றும் சர்வதேச நிலைகளில் பல பொறுப்புகள் ஆகியவை அடங்கும். MAHABS 2021 ரோட்டரி மண்டல கருத்தரங்கு (Rotary Zone Institute) மற்றும் 2023 மெல்போர்ன் ரோட்டரி இன்டர்நேஷனல் மாநாட்டில் தென் ஆசிய வரவேற்பு நிகழ்ச்சி ஆகியவற்றின் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
மேலும், LEAD 2025 – AIM HIGH எனும் ரோட்டரி இந்திய தலைமை மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராகவும் அவர் செயல்பட்டார்.
ஆகஸ்ட் 2025-ல் நடைபெற்ற இந்த மாபெரும் நிகழ்வில் 10-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 12,500 ரோட்டேரியன்கள் கலந்து கொண்டனர். இதில் ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவர், தமிழ்நாடு துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாடு சிறிய ரோட்டரி மாநாடு (Mini Rotary Convention) எனப் பெரிதும் பாராட்டப்பட்டது.
கடந்த மாதம், ரோட்டரி இன்ஸ்டிட்யூட் 2026 நிகழ்வு இலங்கையில் நடைபெறும் என்று முருகானந்தம் அறிவித்தார். இதுவரை இந்தியா, நேபாளம், பூடான், இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு ரோட்டரி இயக்குனராக இருந்த முருகானந்தம் அவர்கள், தற்பொழுது 220 நாடுகளுக்கு ரோட்டரி துணை தலைவராக செயல்பட உள்ளார். அவருக்கு உலகெங்கும் உள்ள ரோட்டேரியன்கள், அவரது ரோட்டரி இன்டர்நேஷனல் துணைத் தலைவர் தேர்வை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்று வாழ்த்தியுள்ளனர்.